இந்திரவிழா
ஃபேனை கொண்டு வந்து மூக்கினுள்ளேயே வைத்த மாதிரி, திணற திணற அடித்திருக்கிறார்கள். சுட சுட விருந்து.
தனியார் தொலைக்காட்சியில் சீனியர் புரோகிராம் ஆபிசர் ஸ்ரீகாந்த்.
இவரது புரோகிராம்கள் எல்லாமே டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப். ஆனால்,
முதலாளியம்மா நமீதாவோ, இவரை ஹோப் லெஸ் என்கிறார். ஏன்? புளியை கரைக்கிறது
அந்த ப்ளாஷ்பேக். வெளிநாட்டில் இவரை சந்திக்கும் ஸ்ரீகாந்த்தை காந்த
கண்ணால் வீழ்த்துகிறார். (கண்ணால் மட்டுமா?) அப்படியே பசி
எடுத்தவர்களுக்கெல்லாம் இலை போடுவதும் இவரது
ஹாபி
என்பது தெரியவர, அங்கேயே காதலை முறித்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
அதன்பின் எப்படி எப்படியோ ஸ்ரீகாந்துக்கே 'பாஸ்' ஆகிறார் நமீ. விட்ட குறை,
தொட்ட குறையாக தமிழ்நாட்டுக்கு வரும் இவர், ஸ்ரீகாந்த்தை அடைய முயல, இவர்
விலக, ஆரம்பிக்கிறது யுத்தம்.
தன்னை கற்பழிக்க முயன்றதாக பொய் குற்றம் சுமத்துகிறார் நமீ.
இல்லை என்பதை நிரூபிக்க கோர்ட்டுக்கு போகிறார் ஸ்ரீ. இதுவரைக்கும்
நல்லாதான் போவுது. அதுக்கு பிறகு கேமிராவை கோர்ட்டுக்குள்ளே வைத்துவிட்டு
டைரக்டரும் தம்மடிக்க போய்விட்டதுதான் சோகம். வளவளவென்று கோர்ட்டில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள். 'இனி சமாதானம் கிடையாது. சண்டைதான்' என்று
துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்த ஸ்ரீகாந்த், ஒரு ஆக்ரோஷமும் இல்லாமல்
அசடு வழிவது எப்படி சண்டையாகுமோ?
பொருந்தாத நீதிமன்ற செட்டில், விவேக் விடும் 'பஞ்ச்'சுகள்
ஒவ்வொன்றும் சரவெடி. கொட்டாவி நேரத்தில் பிளாக் டீ ஊற்றி கண்ணயர்தலில்
இருந்து காப்பாற்றுகிறார் மனுஷன்.
மொத்த படமும் நமீதா, வேறென்ன இருக்கு புதுசா?