உனை இழக்க மாட்டேனடி!!!!
உனை இழக்க மாட்டேனடி!!!!
வண்ணமயில்த் தோகையிலே
வான்மதியே உந்தன் முகம்
வர்ணனையாய் தெரியுதடி
கண்மணியே உந்தன் கயல்!
வெண்மதியே உன்னை நானும்
பொன்மதியாய் பார்த்திருபேன்
என் மதியே என்னைவிட்டு
வேறுலகம் செல்லாதடி!
ஈரொன்பது ஆண்டுகள் நானும்
இயல்புடனே இருந்தேனடி
ஒரு நொடியில் உனைக்கண்டு
இயல்பிழந்து போனேனடி!
இயல்பிழந்து போனபோதும்
உனை இழக்க மாட்டேனடி