உன்னிடம்உன்னிடம் நான் இலவசமாய்க்கூட எதிர் பாக்காத பரிசு
நான் வேணாமென்று சொல்லியும் நீ தந்து விட்டு போன
பரிசு
ஆமாம்.. என் மரணம் வரை மறக்க முடியாத உன் பிரிவென்ற
பரிசு
*
இலவசமாய் எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காய் பெறுமதி வாய்ந்த
ஆண்கள் அழுவது பிடிக்காதென்றாய்
ஓ.. அப்படியென்றால் பெறுமதி வாய்ந்த நீ கிடைக்கவில்லை என்று
நானழுவது தவறா?
* சொல் உன்னை நினைத்துக் கொண்டே நான் இறக்க
வேண்டுமென்றா? பெறுமதி வாய்ந்த என் மறதியை கடனாய் வாங்குவதாய் களவாடி
போனாய்?
* சொல் நீ என் பெறுமதி வாய்ந்தவள் என்பதால் உன்னை வாழ
வாழ்த்தவா?
இல்ல பிரிவில் மட்டும் நீ தனியாய் போனதை எண்ணி
திட்டவா?
* இலவசமாய்க்கூட யார் பார்வையும் படாதவனாய் படு
மோசமான பாலைவனமாய்க் கிடந்தேன் எதற்கடி விழுந்தாய் என் மேல் முதல்
மழையாய்?
* குடிசை வாங்க கூட பெறுமதி இல்லாதவனை எதற்கடி கோட்டைகளை
வாங்குமளவுக்கு நம்பிக்கைகளை ஊட்டினாய்?
* அன்று உன் முதல் பார்வையிலே நான் உருகியபோது
நான் பலவினமானவனென்று எண்ணவில்லை
உன் பார்வையின் பலத்தைதான் பாராட்ட நினைத்தேன்ஆனால் இன்று
என் நினைவே பார்வையாக பார்வையே நினைவாக இலவசமாய்க் கழிக்கிறேன்
* கையெழுத்து மட்டும் போட பேனா பிடித்த கிராமத்தவனை கவி
எழுத வைத்தவளே..
உன்னால் எப்படி முடிந்தது?
இலவசமான என்னை பெறுமதி வாய்ந்ததாய் ஆக்கவும்
பெறுமதி வாய்ந்த
உன்னை பெற்றோர்களுக்காய் இலவசமாக்கவும்
* என் கண்ணிரை துடைத்துவிடத்தான் உன்
கரங்களுக்குஎட்டாது என் கவிதையின் கண்ணிரை துடைப்பதற்காகவேனும்
ஆழமான சமுத்திரத்தையே அடக்கி வைத்திருக்கும் உன் கண்களால்
இலவசமாய் பார்த்துவிட்டுப் போ
பெறுமதி வாய்ந்த உன் கண்ணீரைத்தான் தேடி திரிகிறது என்
கவிதைகள் நாளைய என் மரணத்துக்காய் அழுவதற்கு!.
|