ஒரு நாள் உன்னை விட்ட...
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து
வந்ததற்கே எப்படி பிரிய
முடிந்ததென்றா
கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை
திறந்து பார் பிரிவுக்
கவிதை
எழுதிக்கொண்டிருப்பேன்
நீயே சொல் ..
என் நம்பிக்கை நீயென்ற பின்
நம்பிக்கை இல்லாமல்
நீ
தள்ளியே நின்றால் விழுந்திட
மாட்டெனோ
உன் முதல் சந்திப்பும்
உன் முதல் பிரிவும்
சில
நாட்களுக்குள்
நடந்தேறியிருந்தாலும்
உன் பிரிவு மட்டும் இன்னும்
என்னை
வாட்டுகிறது
உனக்கும் இரவில் உலாப் போக
பிடிக்குமா சரி வா போய்
வருவோம்
அதற்க்கு முன் நிலாவிடம்
சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்
ஓய்வெடுத்து
வரும்படி
உன்னை நான் பார்க்க வரும் போது
மட்டும்தான் ஏறும்
பேருந்தையும்
இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில்
இருப்பவர்களிடம் கேட்டு
தெரிந்து
கொள்கிறேன் அவ்வளவு அவசரம் எனக்கு