ஆனந்த தாண்டவம
மறைந்த
எழுந்தாளர் தல சுஜாதா எழுதிய விகடனில் தொடர்கதையாய் வெளிவந்த சூப்பர்
டூப்பர் ஹிட் நாவல். அதுவும் நாவலின் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி கேட்டு வந்த
கடிதங்கள் எவ்வளவோ என்றனர். அப்படி பட்ட நாவலை காந்திகிருஷ்ணா
இயக்குகிறார் என்றதும் சுஜாதாவின் ரசிகர்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு
எகிறி போனதென்னவோ நிஜம் தான். அன்று உன் அருகில் என்கிற நாவலை மிக அழகாய்
படமெடுத்தவர்தான் இந்த காந்திகிருஷ்ணா.. அதனால் இன்னும், இன்னும்
எதிர்பார்ப்பு.. கூடியது. மொத்தமாய் எதிர்பார்ப்பு பானையை ந்டு ரோட்டில்
உடைத்துவிட்டார். என்றுதான் சொல்ல வேண்டும். வேலை
தேடி அலையும் ரகுபதி, பாணதீர்த்ததில் அவனும் அப்பாவும் மட்டுமே இருக்க,
உயர் அதிகாரி கோபிநாத்தின் மக்ள் மதுமிதாவை பார்த்த மாத்திரத்தில் ரகுபதி
காதலிக்க ஆரம்பிக்க, நிச்சயம் வரை போன காதல், தீடீரென ராட் என்கிற
அமெரிக்க ராதாகிருஷ்ணன் புயல் போல வந்து மதுமிதாவை கவர்ந்து போக, சுயமாய்
எந்த முடிவும் எடுக்க தெரியாத, விளையாட்டு தனமான மதுமிதா, ராதாகிருஷ்ணன்
என்கிறா புயலில் தூக்கி போகப்படுகிறாள். காதலில் தோற்ற ரகுபதி, என்ன
முடிவு எடுக்கிறான். மீண்டும் மதுவை சந்தித்தானா, அவனை காதலித்த ரத்னா
என்னவானாள் என்பது பற்றி விரிவாய் திரையில். மதுமிதாவாய்
தமன்னா.. இருபது வருடஙக்ளுக்கு முன் என் மனக்ண்ணில் ஓடிய மதுமிதாவை கண்
முன்னே வலைய வர விட்டிருக்கிறார் இயக்குனர். தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்த
பெண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க. மீனாட்சியாய்
பொம்மலாட்டம் ருக்மிணி, சரியான சாய்ஸ் எனக்கென்னவோ இவர் மட்டும் கொஞ்சம்
சதைபோட்டு சரியான வேடம் கொடுத்தால் பின்னியெடுப்பார் என்றே தோன்றுகிறது.. இவர்களை
தவிர அருமையா கேரக்டராகவே இயல்பாய் இருப்பவர் கிட்டி, தன் மகனால்
அவ்வப்போது ஹர்ட் ஆகும் போதாகட்டும், கோபமாகட்டும், இயல்பாய்
மெக்னானிமஸாய் நண்பனை போன்ற தகப்பனை கண் முன்னே கொண்டு வ்ந்திருந்தார்.
ஹீரோ
சித்தார்த், கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாத ஒரு முகத்தை வைத்து கொண்டு,
ஆடவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் முதல் படத்து சூர்யாவை விட மோசமான
நடிப்பு நடித்திருக்கிறார் லாங் வே டு கோ.. சித்தார்த் அமெரிக்க
மோகன்ராம் கேரக்டருக்கு சரியான தேர்வு. அதே போல் மீனாட்சியின் பாட்டி,
தாத்தா, அப்பா எல்லாருமே குறையொன்றுமில்லை. மார்க்ராய் சார்லி சரியான
சாய்ஸ். இசை
ஜி.வி. பிரகாஷ் படு மோசமான பிண்ணனி இசை, அதிலும் பாடல்கள் அனைத்தும் மிஸ்
ப்ளேஸ்ட். கனா காண்கிறேன் பாடலை தவிர பெரிதாய் மனதில் நிற்கவில்லை. ஷங்கரின் ஒளிப்பதிவு ஆகா ஓகோ என்று சொல்ல முடியவிலலை. . படம்
முழுவதும் சுஜாதாவின் வசனம் மிளிர்கிறது. ஆனால் மோசமான நடிப்பும்,
திரைக்கதை சொதப்பல்கள், ஃபைவ் ஸ்டார் கிருஷனாவின் காமெடி சுத்த போர்.
ராட்டாக வரும் ராதாகிருஷ்ணைன் உச்சி மண்டையை எதுக்காக் ஷேவி
செய்திருக்கிறார்கள்? வரிக்கு வரி சிந்தாமல்
சிதறாமல் பிரிவோம் சந்திப்போம் நாவலை திரைக்கதையாக்கும் வகையில்
சொதப்பிவிட்டீர்களே.. எப்படி நீங்கா இப்படி ஒரு ஹீரோவை செலக்ட்
செய்தீர்கள். ஏன் பல இடங்களில் ஜம்ப், பேசும் போதே கட் செய்யப்பட்டு
அடுத்த க்ளோசப் ஏன்? நிறைய இடஙகளில் லிப் சிங்க் ரொம்ப கேவலம். மதுமிதா
கேரக்டரை சரியாக சொல்லவில்லை. நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே உணர
முடியும். ஏன் உணர்வு பூர்வமாய் வரவேண்டிய காட்சிகளை எல்லாம் ஏன் இப்படி
ஆர்டிஸ்டின் ரியாக்ஷன்கள் இல்லாமல் எடுத்திருக்கிறீர்கள்? இப்படி பல
ஏன்களுடன்.. இப்படி ஏமாத்திட்டீங்களே காந்தி கிருஷ்ணா…
மறைந்த
எழுந்தாளர் தல சுஜாதா எழுதிய விகடனில் தொடர்கதையாய் வெளிவந்த சூப்பர்
டூப்பர் ஹிட் நாவல். அதுவும் நாவலின் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி கேட்டு வந்த
கடிதங்கள் எவ்வளவோ என்றனர். அப்படி பட்ட நாவலை காந்திகிருஷ்ணா
இயக்குகிறார் என்றதும் சுஜாதாவின் ரசிகர்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு
எகிறி போனதென்னவோ நிஜம் தான். அன்று உன் அருகில் என்கிற நாவலை மிக அழகாய்
படமெடுத்தவர்தான் இந்த காந்திகிருஷ்ணா.. அதனால் இன்னும், இன்னும்
எதிர்பார்ப்பு.. கூடியது. மொத்தமாய் எதிர்பார்ப்பு பானையை ந்டு ரோட்டில்
உடைத்துவிட்டார். என்றுதான் சொல்ல வேண்டும். வேலை
தேடி அலையும் ரகுபதி, பாணதீர்த்ததில் அவனும் அப்பாவும் மட்டுமே இருக்க,
உயர் அதிகாரி கோபிநாத்தின் மக்ள் மதுமிதாவை பார்த்த மாத்திரத்தில் ரகுபதி
காதலிக்க ஆரம்பிக்க, நிச்சயம் வரை போன காதல், தீடீரென ராட் என்கிற
அமெரிக்க ராதாகிருஷ்ணன் புயல் போல வந்து மதுமிதாவை கவர்ந்து போக, சுயமாய்
எந்த முடிவும் எடுக்க தெரியாத, விளையாட்டு தனமான மதுமிதா, ராதாகிருஷ்ணன்
என்கிறா புயலில் தூக்கி போகப்படுகிறாள். காதலில் தோற்ற ரகுபதி, என்ன
முடிவு எடுக்கிறான். மீண்டும் மதுவை சந்தித்தானா, அவனை காதலித்த ரத்னா
என்னவானாள் என்பது பற்றி விரிவாய் திரையில். மதுமிதாவாய்
தமன்னா.. இருபது வருடஙக்ளுக்கு முன் என் மனக்ண்ணில் ஓடிய மதுமிதாவை கண்
முன்னே வலைய வர விட்டிருக்கிறார் இயக்குனர். தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்த
பெண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க. மீனாட்சியாய்
பொம்மலாட்டம் ருக்மிணி, சரியான சாய்ஸ் எனக்கென்னவோ இவர் மட்டும் கொஞ்சம்
சதைபோட்டு சரியான வேடம் கொடுத்தால் பின்னியெடுப்பார் என்றே தோன்றுகிறது.. இவர்களை
தவிர அருமையா கேரக்டராகவே இயல்பாய் இருப்பவர் கிட்டி, தன் மகனால்
அவ்வப்போது ஹர்ட் ஆகும் போதாகட்டும், கோபமாகட்டும், இயல்பாய்
மெக்னானிமஸாய் நண்பனை போன்ற தகப்பனை கண் முன்னே கொண்டு வ்ந்திருந்தார்.
ஹீரோ
சித்தார்த், கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாத ஒரு முகத்தை வைத்து கொண்டு,
ஆடவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் முதல் படத்து சூர்யாவை விட மோசமான
நடிப்பு நடித்திருக்கிறார் லாங் வே டு கோ.. சித்தார்த் அமெரிக்க
மோகன்ராம் கேரக்டருக்கு சரியான தேர்வு. அதே போல் மீனாட்சியின் பாட்டி,
தாத்தா, அப்பா எல்லாருமே குறையொன்றுமில்லை. மார்க்ராய் சார்லி சரியான
சாய்ஸ். இசை
ஜி.வி. பிரகாஷ் படு மோசமான பிண்ணனி இசை, அதிலும் பாடல்கள் அனைத்தும் மிஸ்
ப்ளேஸ்ட். கனா காண்கிறேன் பாடலை தவிர பெரிதாய் மனதில் நிற்கவில்லை. ஷங்கரின் ஒளிப்பதிவு ஆகா ஓகோ என்று சொல்ல முடியவிலலை. . படம்
முழுவதும் சுஜாதாவின் வசனம் மிளிர்கிறது. ஆனால் மோசமான நடிப்பும்,
திரைக்கதை சொதப்பல்கள், ஃபைவ் ஸ்டார் கிருஷனாவின் காமெடி சுத்த போர்.
ராட்டாக வரும் ராதாகிருஷ்ணைன் உச்சி மண்டையை எதுக்காக் ஷேவி
செய்திருக்கிறார்கள்? வரிக்கு வரி சிந்தாமல்
சிதறாமல் பிரிவோம் சந்திப்போம் நாவலை திரைக்கதையாக்கும் வகையில்
சொதப்பிவிட்டீர்களே.. எப்படி நீங்கா இப்படி ஒரு ஹீரோவை செலக்ட்
செய்தீர்கள். ஏன் பல இடங்களில் ஜம்ப், பேசும் போதே கட் செய்யப்பட்டு
அடுத்த க்ளோசப் ஏன்? நிறைய இடஙகளில் லிப் சிங்க் ரொம்ப கேவலம். மதுமிதா
கேரக்டரை சரியாக சொல்லவில்லை. நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே உணர
முடியும். ஏன் உணர்வு பூர்வமாய் வரவேண்டிய காட்சிகளை எல்லாம் ஏன் இப்படி
ஆர்டிஸ்டின் ரியாக்ஷன்கள் இல்லாமல் எடுத்திருக்கிறீர்கள்? இப்படி பல
ஏன்களுடன்.. இப்படி ஏமாத்திட்டீங்களே காந்தி கிருஷ்ணா…
|